top of page

ஏக்கம்

  • Writer: தமிழ் குரங்கு
    தமிழ் குரங்கு
  • Feb 20, 2024
  • 1 min read

Updated: Feb 29, 2024


ஏக்கம்


விழி தூங்காமல் விழிநீரும் வீணாகுதே

வில்பார்வை படாமல்!!

களி ஒன்று கலியில் இல்லையோ என

கணமும் கதைக்கிறது கல்நெஞ்சம்!!


மழைத்தூரல் கூட மண்ணை முத்தமிட

மரணிக்க துடிக்கிது!!

மனங்கொண்டவளே மனதை வருடி

மான்பாய்ச்சலில் மகிழ்விப்பது எப்போது!!


உன் நினைவுகள் நிம்மதியை துளைக்க

நினைக்காத நாளில்லையே நிலவே

உன்னை!!


மஞ்சள் மடாபுறாவே மலர்கூந்தலில்

மையல் கொள்ள ஊடல் கொள்வது

எப்போது ஏங்குகிறது எந்தன் மனம்!!


குலையாத மனம் எனும் குளமும்

கலையாத கோலம் எனும் கனவும்

வேண்டும்!!

கனியே!! கரை சேர்ந்திட வா!!


                                        - தமிழ் குரங்கு

Comments


bottom of page